Mnadu News

பஞ்சாப்பில் அரங்கேறிய கொடூர கொலை! மூவரை அடித்து கொன்ற இளைஞர்! மலைக்க வைத்த வாக்குமூலம்! நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம், நியூ ஜானக்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் சமன் லால்-சுரீந்தர் கவுர் தம்பதி. இவர்களின் பக்கத்து வீட்டில் முன்னா என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. குழந்தை இல்லாததை அடிக்கடி சுட்டி காட்டி சுரீந்தர் கவுர் முன்னாவை மன அழுத்தத்துக்கு ஆளாக்கி உள்ளார். 

இதனால், ஆத்திரம் அடைந்த முன்னா சுரீந்தரை கொலை செய்ய திட்டமிட்டு, சுரீந்தர் உட்பட அந்த இல்லத்தில் இருந்த மூன்று முதியவர் களையயும் கொடூரமாக கொலை செய்து உள்ளார். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் தங்களின் விசாரணையை துவக்கிய போலீஸார், பக்கத்து வீட்டில் இருக்கும் முன்னாவிடமும் விசாரித்த போது அவரின் பேசியதில் சந்தேகம் எழவே அவரை தங்கள் பாணியில் விசாரித்த போது, கொலை குறித்த உண்மை வெளியானது. 

இந்த நிலையில் முன்னா தமது வாக்குமூலத்தில் “சுரீந்தர் தங்களுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதை அண்டை வீட்டுக்காரர்கள் முன்னிலையில் கூறி கேலி செய்துள்ளார். இதனால், சுரீந்தரை கொலை செய்ய முடிவு செய்து, மூன்று பேரையும் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்”.  இந்த சம்பவம் பஞ்சாப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Share this post with your friends