காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” 35 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உள்ளது ஏன்? 45 ஆண்டுகளில் வேலையின்மை அதிகமாக உள்ளது ஏன்? பரோட்டாக்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்? விவசாய டிராக்டர்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்? பிரதமர் அவர்களே, பாரத் ஜோடோ யாத்திரை இந்தக் கேள்விகளையும் இன்னும் பல கேள்விகளையும் உங்களிடம் கேட்கும். இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More