Mnadu News

பணவீக்கம், குறித்து பிரதமர் பதில் கூற வேண்டும் – ராகுல் காந்தி ஆவேசம்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” 35 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உள்ளது ஏன்? 45 ஆண்டுகளில் வேலையின்மை அதிகமாக உள்ளது ஏன்? பரோட்டாக்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்? விவசாய டிராக்டர்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்? பிரதமர் அவர்களே, பாரத் ஜோடோ யாத்திரை இந்தக் கேள்விகளையும் இன்னும் பல கேள்விகளையும் உங்களிடம் கேட்கும். இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends