பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். என்று தெரிவித்துள்ளார்.