உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் அடுத்த படமாக திரைக்கு வர இறக்கும் படம் என்றால் அது தலைவன் இருக்கிறான் என்ற படம் .இந்த படத்தில் தற்பொழுது ருசிகரமான தகவலை கமல் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.உலக நாயகன் கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் ,இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுக்கு மறுபதிவிட்ட கமல்ஹாசன், தலைவன் இருக்கிறான் படத்தின் அணியை வலுப்படுத்தியிருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பங்களிப்புக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். தெனாலி படத்திற்கு பிறகு, பத்தொன்பது ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி சேர்ந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thanks ARR for strengthening the team with your participation.Very few projects feel good & right even as we develop it.Thalaivan Irukkindraan is one such.Your level of excitement for the project is very contagious.Let me pass it on to the rest of our crew @RKFI @LycaProductions https://t.co/SGI3Gn6ezZ
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2019