Mnadu News

பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி; 50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் காயம்.

உத்திர பிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று நடந்த துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர.; இதில், 22-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கு குறைந்த மின்னழத்தம் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Share this post with your friends