Mnadu News

பப்ஜி விளையாடியதால் உயிரழிந்த இளைஞன்

காலையில் எழுந்ததும் படிப்பு ,மாலையில் விளையாட்டு என்ற பாரதியார் பாடற்கேற்ப குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் தற்போது உள்ள நடைமுறையினர் இணையதளத்தில் மூழ்கியுள்ளனர் . அந்த வரிசையில் தற்போது உள்ள தலைமுறையினரால் இணையதளத்தில் விரும்பி விளையாடுகின்ற விளையாட்டு என்னவென்றால் அது பப்ஜி விளையாட்டு தான் . தெலுங்கானாவில் இந்த பப்ஜி விளையாட்டை 45 நாட்கள் தொடர்ந்து விளையாடியதில் சாகர் என்ற இளைஞரின் கழுத்துநரம்பு பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . மேலும் உயிரழிந்த சாகரின் நண்பர்கள் பப்ஜி விளையாட வேண்டாம் என்ற விழிப்புணர்வு விடியோவை வெளியிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது .

 

Share this post with your friends