தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்க்க , போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், டிரைவர்கள், நடத்துனர்கள் பணியின் போது பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து, சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்த்டத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை, பயணிகளிடம் உரிய பயணச் சீட்டு அளித்து வசூலிக்க வேண்டும். என்று சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More