Mnadu News

பறக்கும் படையினரால் கைப்பற்ற பட்ட நாட்டுப்புற பாடல் கலைஞரின் பணம்

தமிழகத்தில் நாட்டுப்புற கலைகளில் மிகவும் பிரபலமடைந்த தம்பதி தான் நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா . நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் இவர்கள் பல திரைப்படங்களிலும் , மேலும் பல இடங்களில் கச்சேரிகள் நடத்தியும் வருகின்றனர் . இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி முடித்துவிட்டு காரில் சேலம் திரும்பியுள்ளார்கள்.

அப்போது அவர்கள் வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து அவர்களிடம் இருந்த 57000 ரூபாய் பணத்தை உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்ததாக சொல்லி பறிமுதல் செய்தனர் . இருவரும் இது எங்களுக்கு சம்பளமாக கொடுத்த பணம் என்று சொல்லியும் பறக்கும் படையினர் கேட்கவில்லை . அதன் பின் விழா அமைப்பாளரை அலைபேசியின் மூலம் சம்பவ இடத்துக்கு வர சொல்லி தேர்தல் பறக்கும் படையினருக்கு புரிய வைத்தனர் .பின்னர் அந்த பணத்தை புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதாவிடம் தேர்தல் அதிகாரிகள் கொடுத்தனர் .

Share this post with your friends