கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 42 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் நேற்று இரவு தனியார் சுற்றுலா பேருந்து மூலம் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக கிளம்பியுள்ளனர். அப்போது சுமார் 11.30 மணியளவில் சுற்றுலா பேருந்து வடக்கஞ்சேரி மங்கலம் அருகே வந்த போது முன்னால் கோவையை நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் விஷ்னு, மாணவி அஞ்ஞனா அஜீத், இமானுவேல், தியா ராஜேஷ், கிரிஸ் வின்டர்பான் தாமஸ், எல்னா ஜோஸ், அரசு பேருந்தில் சென்ற அனூப், ரோஜித் ராஜ், தீபு ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த வடக்கஞ்சேரி போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயமடைந்த மாணவர்கள் மற்றும் அரசு பேருந்து பணிகளை திருச்சூர் அரசு மருத்துவமனை, மற்றும் பாலக்காடு, நெம்மாரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More