Mnadu News

பழநியில் காலிஃபிளவர் பூ ரூ.15-க்கு விற்பனை: விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, பழநி அருகே குதிரையாறு அணை, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலிஃபிளவர் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பழநி குதிரையாறு அணை பகுதியில் காலிஃபிளவர் பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு காலிஃபிளவர் பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன. தற்போது காலிஃபிளவர் சீசன் இல்லாத நிலையிலும் வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக ஒரு காலிஃபிளவர் பூ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரைக்கும் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this post with your friends