Mnadu News

பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு .

அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,பஸ்சில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு என தெரிவிக்கப்ட்டுள்ளது. அதே சமயம், மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும், அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், காவல் நிலையத்தில் அல்லது அவரச காவல் உதவி எண் 100-ஐ நாடலாம் எனவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends