பாகிஸ்தானில் பலுசிஸ்தான் நீதிமன்ற தலைமை நீதிபதி முகம்மது நூர் மெஸ்கன்ஷி. ஹரன் என்ற பகுதியில் ஒரு மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வெளியே வரும் போது சில அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதற்கு பலுசிஸ்தான் முதல் அமைச்சர் அப்துல் குதூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆற்றிய சேவை மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகி வருவதாக அந்நாட்டு பத்திரிகைகள் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More