கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து அம்மாநில முன்னாள் துணைமுதல் அமைச்சர்; லக்ஷ்மன் சவதி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல் அமைச்சர்; சித்தராமையா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், “எங்களுக்குள் எந்த நிபந்தனையும் கிடையாது. தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் உணர்கிறார். இவரைப் போன்ற சிறந்த தலைவர்களை காங்கிரஸில் இணைத்துக்கொள்வது எங்களின் கடமை. இன்னும் 9-10 ஆளுங்கட்சி எம்எல்ஏ-கள் காங்கிரஸில் இணைய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் இணைத்துக்கொள்ளும் அளவிற்கு எங்களிடம் இடமில்லை” என்றார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More