பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர்.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஷெட்டரை சமாதானப்படுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை.,இதையடுத்து தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், பாஜகவில் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் அமைச்சர்; சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More