Mnadu News

பாஜக அரசில் அமைச்சராக ஒரு முஸ்லிம் கூட இல்லை: அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு.

தெலுங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி,9 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எழுப்பட்ட கேள்விக்கு இந்தியப் பிரதமர் பதிலளித்துள்ளார்.அந்த பதிலில், இந்தியாவில் பாகுபாடு இல்லை என்று பேசினார்.அப்படியானால், மணிப்பூரில் 300 தேவாலயங்கள் எரிக்கப்பட்டன, அது பாகுபாடு இல்லையா? சிஏஏ சட்டம் பாகுபாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதே நேரம் பாஜக அரசில்; அமைச்சராக ஒரு முஸ்லிம் கூட இல்லை. இவை பாகுபாட்டின் எடுத்துக்காட்டுகள்.என்று கூறி உள்ளார்.

Share this post with your friends