Mnadu News

பாதுகாப்பு கருதி ராகுலை தரை மார்கமாக செல்ல அனுமதிக்கவில்லை: பிஷ்னுபூர் எஸ்.பி விளக்கம்.

மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசயுள்ள பிஷ்னுபூர் எஸ்.பி ஹெய்ஸ்னம் பல்ராம் சிங், “தரை வழி நிலவரத்தைப் பார்த்து, ராகுல் காந்தியை சுராசந்த்பூருக்கு செல்ல விடாமல் தடுத்தோம். அதே சமயம்.ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்கு செல்லுமாறு அறிவுறுத்தினோம்.ஏனெனில், நெடுஞ்சாலையில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.அதனால், ராகுல் காந்தியின் பாதுகாப்பை மனதில் வைத்து நாங்கள் அவரை தரை மார்கமாக சுராசந்த்பூர் செல்ல அனுமதிக்கவில்லை. என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More