ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும், சுற்றுலா வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்துகளில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/8754.jpg)
தனியார் பேருந்து பாம்பன் சாலை பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியதில் தடுப்பு சுவர் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த தனியார் பேருந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கயிற்றால் கட்டி தனியார் பேருந்தை சாலைக்கு இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்