224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த ஊர்வலத்தில் பங்கேற்க வந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப், {ஹப்ளி விமான நிலையத்தில் வைத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More