Mnadu News

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி தேர்வு.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. இருந்த போதிலும்; ,கடந்த 1983-இல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில்; இடம்பெற்றிருந்தவரும் இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 72 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள 67 வயதான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக போட்டியின்றித் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

Share this post with your friends