Mnadu News

பிரதமர் பங்கேற்கும் காந்திகிராம நிகழ்ச்சிக்கு அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை.

காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் 36 -ஆவது பட்டமளிப்பு விழா வேந்தர் கே.என். அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் கலந்து கொள்கிறார்.
விழாவில், 2018-19, 2019-20 -ஆம் ஆண்டுகளில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகளை முடித்த 2 ஆயிரத்து 314 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இவர்களில், 115 மாணவர்கள் பதக்கம் பெறுகின்றனர். இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற தலா ஒரு மாணவர், மாணவி என மொத்தம் 4 பேர், பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பட்டங்களைப் பெறுகின்றனர். இதேபோல, கலைகள் மூலம் சமுதாயத்துக்கு பெரும் பங்காற்றிய திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் பிரதமர் வழங்குகிறார்.
பட்டமளிப்பு விமாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருகிறார்.
அவரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேர், ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.
,பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மதுரை விமான நிலையத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலபம் விசாகப்பட்டினம் செல்கிறார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை உயரதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதோடு, தலைவர்களுக்கு வழங்ப்படும் பூங்கொத்துக்கள், மாலைகள் உள்ளிட்ட பொருள்கை தீவிர சோதனைக்கு உள்படுத்த காவல்துறையினருக்கு உள்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காந்திகிராம பல்கலை. வளாகம், ஹெலிபேட் தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஹெலிபேட் தளத்திலிருந்து பல்கலை. வளாகத்துக்கு பிரதமர் வரும் பாதையில், 5 வாகன அணிகள் உள்பட 15 கார்களை வரிசையாக இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதே போல, பல்கலை. நுழைவு வாயில் முதல் விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கு வரை சாலையின் இருபுறங்களிலும் மாணவர்களை நிறுத்தியும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.

ஹெலிபேட் தளத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் மாடி, சின்னாளப்பட்டி பிரிவு மேம்பாலம் ஆகிய இடங்களிலும் கண்காணிப்புப் பணிக்காக போலீஸார் நிறுத்தப்பட்டனர். பல்கலை. வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளன.

ஹெலிபேட் தளத்திலிருந்து பிரதான சாலை சந்திப்பு, நான்கு வழிச் சாலையின் மையப் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Share this post with your friends