Mnadu News

பிரபல உணவகத்தில் வண்டு கேசரி..! “வேணும்னா சாப்பிடு – இல்லேன்னா கிளம்பு”

*பிரபல உணவகத்தில் வண்டுகள் மொய்த்த கேசரி பரிமாறப்பட்டதால் அதிர்ச்சி.

*உணவகத்தில் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு தினம்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் அருகிலுள்ள பிரபல சந்திரா ஹோட்டல் என்ற அசைவ உணவகத்தில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது அப்போது சப்ளையர் பரிமாறிய கேசரியில் வண்டுகள் மொய்த்து காணப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் இது குறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது ‘இப்படித்தான் இருக்கும் வேணும்னா சாப்பிடுங்க, இல்லேன்னா கிளம்புங்க’ என மிரட்டும் தோனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சாப்பிட வந்தவர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ்யிடம் இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். பிரபல உணவகத்தில் பரிமாறிய கேசரியில் வண்டு மொய்த்த சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்போல் வேளாங்கண்ணியில் பல்வேறு உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடைகளை சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends