லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் பி.வாசு ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் முக்கிய ரோல்களில் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள படம் “சந்திரமுகி -2”. இவர்களோடு வடிவேலு, ராதிகா, ரவி மரியா, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார், கார்த்திக் ஸ்ரீநிவாசன் போன்ற பலர் உழைப்பில் உருவாகி உள்ளது.
ஆஸ்கர் மற்றும் தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி அவர்கள் உலக தர இசையை கொடுத்துள்ளார். அவரின் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் வைரல் ரீச் ஆன நிலையில், இன்று மாலை இசை வெளியீட்டு விழா நிகழ்வதாக நேற்று மாலை லைக்கா நிறுவனம் அறிவித்தது. இது சென்னை ஜேப்பியர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 15 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ள “சந்தரமுகி-2” குறித்து மனம் திறந்து பேசியுள்ள இயக்குனர் பி.வாசு, இப்படம் நல்ல ஸ்கிரிப்ட் என்று பலர் தன்னை பாராட்டி உள்ளதாக கூறி உள்ளார். மேலும், இந்த படம் நிச்சயம் நன்றாக வரும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதல் வாழ்த்தை கூறியதாக ஒரு தனியார் சேனல் நடத்திய நேர்காணலில் கூறி உள்ளார்.