தே.மு.தி.க பொருளாளரும் ,விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது இரு மகன்களுடன் ஒரு பெரிய கேக்கினை வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் .இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு , பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி பிரேமலதாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தல் கூட்டணியில் எந்த பிரச்சினையுமின்றி, ஒற்றுமையுடன் பணியாற்றுவோம் எனக் கூறினார்.மேலும் தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.