பீகாரில் கயா நகரில் வசித்து வரும் மாணவர் ரிஷப் ஜேஇஇ எனப்படும் பொறியியல் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த மாணவன் இன்ஸ்டாகிராமில் சிறுமி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/insta.jpg)
இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி நேரில் வந்து சந்திக்கும்படி அந்த சிறுமி, மாணவரிடம் கூறியுள்ளார். ஆனால், அப்போது மாணவரால் போக முடியாததால் கடந்த 30 ஆம் தேதி நண்பனை அழைத்து கொண்டு சிறுமியை காண ஆவலாக சென்று உள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/insta-1.jpg)
சிறுமியை பார்த்ததும், நண்பரை திரும்பி போகும்படி கூறியுள்ளார். ஆனால், அதன்பின்னரே அந்த சிறுமியின் உண்மையான முகம் வெளிப்பட்டது. அந்த சிறுமி 3 பேருடன் சேர்ந்து, அந்த மாணவரை கடத்தியுள்ளார்.
இதன்பின், மாணவரின் குடும்பத்தினரிடம் ₹50 லட்சம் பணம் கேட்டு சிறுமி மிராட்டியதோடு மட்டும் நின்று விடாமல் பணம் தரவில்லை எனில், மாணவரை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/insta-3.jpg)
மேலும், எங்கு பணத்துடன் வர வேண்டும் என கேட்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்பு, சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால், போலீசாரிடம் மாணவனின் குடும்பத்தார் தெரிவித்து உள்ளனர். மேலும், மாணவரின் நண்பரிடம் போலீசார் விசாரித்தனர். பின்பு, மாணவரின் செல்போன் உரையாடல்களை போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். போலீசாரின் சிறப்பு விசாரணை குழுவினர் பாட்னா நகரில் சிறுமியை கைது செய்து, கடத்தலுக்கு உதவிய மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/insta-4.jpg)