Mnadu News

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக.

இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் பரிசுப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான புனைகதை புக்கர் பரிசுப் போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 165 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
இதில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய ‘செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ நாவல் நடுவர்களால் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘புக்கர்’ பரிசை வென்றுள்ளது.
இந்நாவல், விடுதலைப் புலிகளுக்கு எதிராக – இலங்கை அரசு நடத்திய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை விவரிக்கிறது.

Share this post with your friends