Mnadu News

புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகன பதிவு நடைமுறை 24 மாநிலங்களில் அமல்.

பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-ஆவது ஆண்டு கூட்டத்தின் நறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை மூலமாக, நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணிப்போர் அல்லது சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படமாட்டாது. மேலும், மாநில மற்றும் உள்ளூர் நடைமுறைகள் அடிப்படையிலான வாகன வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்., இந்தப் புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Share this post with your friends