Mnadu News

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் கைது.

மின் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த ஐந்து நாள்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மின்துறை பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வெளியேற மறுத்ததை அடுத்து, ஊழியர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், இன்று காலை அவர்களை விடுவித்தனர். எனினும் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரந்துள்ளனர்.

Share this post with your friends