கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதையடுத்து, புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவித்து கடந்த 8 ஆம் தேதி புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 34 சதவீதமாக உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, 38 சதவீதமானது. இதற்கான உத்தரவை புதுவை அரசின் நிதித் துறை சார்புச் செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் பிறப்பித்தார்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பேட்டி
தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்...
Read More