Mnadu News

புதுச்சேரி முதல்வர் தீபாவளி பரிசு அறிவிப்பு; மகிழ்ச்சியில் பொதுமக்கள்;

புதுச்சேரி;

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாப்ஸ்கோவின் தீபாவளி சிறப்பங்காடியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணத்தை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் கடந்தாண்டை போலவே அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தீபாவளி பரிசு வழங்கப்படும்’ என்றார்.

Share this post with your friends