Mnadu News

புழல் ஏரியிலிருந்து கூடுதல் உபரி நீர் திறப்பு.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழை இன்றும் தொடர்ந்து வருகிறது.இதனால், செம்பரம்பாக்கம், வீராணம், புழல், ரெட்டேரி உள்ளிட்ட சென்னையிலுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் புழல் ஏரிக்கு நீர்வரத்து இன்று காலை ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு, இன்று சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை குறைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends