பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பாக பெங்களூருவில் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) சோதனை நடத்தினர்.
பயங்கரவாத தொடர்புகளை கொண்ட சந்தேக நபர்களின் வளாகங்களில் மாநில காவல்துறையுடன், என்ஐஏ அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/12/nia_file_1200x768_1200x768-1024x576.jpeg)
முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் முழுவதும் 444 இடங்களில் மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் என்ஐஏ-க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றது.