தலைநகர் டெல்லியில் கடந்த 2019 அக்டோபர் மாதம் முதல் அரசு பஸ்சில் பெண் பயணிகள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டம் மூலம் அரசு பஸ்சில் பெண் பயணிகள் கட்டணமின்றி பயணித்து பயன்பெற்று வருகின்றனர் இந்நிலையில், டெல்லியில் பஸ் நிலையத்தில் காத்திருந்த 3 பெண் பயணிகள் பஸ் வந்ததும் அதில் ஏற முயற்சித்துள்ளனர். ஆனால், ஒரு பயணி பஸ்சில் இருந்து கீழே இறங்கிய உடன் பெண் பயணிகளை ஏற்றாமல் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற பஸ் டிரைவர் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளார். அதோடு, பஸ் டிரைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தில் பஸ்சை கட்டாயம் நிறுத்த வேண்டும் என டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More