திருச்சியில் காவலர்களாக பணியாற்றிய ராஜலட்சுமி சிவக்குமார் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக தகவல்கள் கூறப்பட்டது. இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் மனமுடைந்த ராஜலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டார்.
காதலி இறந்த சோகத்தில் தனது இருசக்கர வாகனத்தை லாரியில் மோதிக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
காதலியுடன் சேர முடியாத சோகத்தில் தற்கொலைக்கு முயன்ற காவலதிகாரியின் செயல் திருச்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.