சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் நகைக்கடையில், நேற்று இரவு திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். நகைக்கடையின் ஷட்டரை வெல்டின் மெஷினால் வெட்டி கடைக்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். நகைக்கடையிலிருந்து 9 கிலோ தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட வைர கற்களின் விலை 20 லட்சம் வரை இருக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் வாய்மொழியாக அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More