மக்களவை மற்றும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுகவும் அதிமுகவும் அறிவித்திருந்தது.
நாளை நண்பகல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முருகனை தேர்வு செய்ததில் அதிமுகவினர் தரப்பில் பெரும் எதிர்ப்பலை நிலவி வருகிறது.
இதனால் பெரியகுளம் வேட்பாளர் முருகனை மாற்றுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.