Mnadu News

பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சை இளைஞர்கள்..!

தஞ்சாவூர் புறவழி சாலையில் இளைஞர்கள் சிலர் இரண்டு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து வருகின்றனர். குழுக்களாக இருக்கும் இளைஞர்கள் தலைக்கவசம் இல்லாமல் இரண்டு சக்கர வாகனங்களில் மிக விரைவாக செல்வது, முன் சக்கரங்களை உயர்த்தி ஒரு சக்கரத்தில் ஓட்டுவது, உள்ளிட்ட சாகசங்களை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த வாகன பந்தயங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends