சமீபத்தில் வெளியான பொதுநலன் கருதி திரைப்படத்தின் இயக்குனர் மீது கருணாகரன் கொலை மிரட்டல் விடுத்ததாக வெளிவந்த செய்திக்கு கருணாகரன் தரப்பில் விளக்கமளித்துள்ளார்.
‘பொதுநலன் கருதி’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கருணாகரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வராததால் இயக்குனர் அவரை அது குறித்து கேட்டிருக்கிறார். அதற்கு கருணாகரனின் ஆதரவாளர்கள் கந்துவட்டி கும்பலுடன் ,கொலை மிரட்டல் விடுத்ததாக திரைப்படத்தின் இயக்குனரான சீயோன் புகார் கொடுத்திருந்தார் .
இதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாகரன் ஒரு பதில் விளக்கத்தை வெளியிட்டுள்ளார் . அவர் குறிப்பிடுகையில் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளாததற்கு சரியான விளக்கத்தை அவரிடம் ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும் , மேலும் தான் எந்த ஒரு கந்து வட்டிக் கும்பலை வைத்து கொலை மிரட்டல் ,போன்ற எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். நடிகர்கள் பொதுவாக உயிரை பணையம் வைத்து நடிப்பார்கள் ,அந்த விதத்தில் என்னுடைய பெயரை நானே கெடுத்து கொள்ள கூடிய எந்த ஒரு செயலில் நான் ஈடுபடவில்லை என இயக்குனர் அளித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை கருணாகரன் வெளியிட்டுள்ளார் .