“பொன்னியின் செல்வன்” நாவல் உலக ரசிகர்களை தன்னகத்தே கொண்டது என்றால் அது மிகையாகாது. இந்த காவியத்தை படமாக்க எத்தனையோ பெரிய ஜாம்பவான்கள் முயன்று தோல்வியையே சந்தித்து உள்ளனர். ஆனால், இதை இயக்குனர் மணி ரத்தினம் தான் சாத்தியபடுத்தி உள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/ponniyin-selvan-1-movie-review-1-tile-1664529887-1.jpg)
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஷ்வர்யா ராய் ,பிரகாஷ் ராஜ், விக்ரம், ரஹ்மான், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராமன், ரியாஸ் கான், லால், நாசர், நிழல்கள் ரவி, கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/wp7287297-3-1024x576.jpg)
படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் 500 கோடிகளை நெருங்கி உள்ளது. இந்த நேரத்தில் படக்குழு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/202202082143148248_Exclusive-Ponniyin-Selvan-1-will-release-on-big-screen-we_SECVPF.jpg)
பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு தயார் என்றும் ஷூட்டிங், டப்பிங் அனைத்தும் முடிந்துள்ளது என்றும், இன்னும் சில வேலைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளது. அதோடு, படத்தை அடுத்த வருட தமிழ் புத்தாண்டுக்கு அதாவது ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டம் இட்டுள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/720x1280_861046-3-2-576x1024.jpg)
பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 250 கோடிகள் தான். ஆனால், முதல் பாகம் வசூலே இதை பெற்று தந்து உள்ளதால் அடுத்த பாகத்தின் வசூல் லைக்காவுக்கு ஜாக்பாட் தான்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/lyca-l5-1582265237-1.jpg)