பொறியியல் படிப்புக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றது. இந்நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதி மூன்றாவது கட்ட கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதே போன்று நான்காம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த உடன் அக்டோபர் மாத இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது, பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது .
பன்னிரெண்டாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேர்வதற்கு, அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல இலவச பேருந்து டிக்கெட் குறித்து விளையாட்டாக கூறியதை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.