Mnadu News

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம்: அமைச்சர் க.பொன்முடி தகவல்.

விழுப்புரத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 114 பொறியியல் மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி;, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில்;, முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ்ப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது. பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ்மொழியை படிக்க வேண்டும் விருப்பம் உள்ளவர்கள் இந்தியை படிக்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தி படிக்குமாறு கூறக்கூடாது எனறு கூறி உள்ளார்.

Share this post with your friends