Mnadu News

பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடங்கள் இருக்காது: அமைச்சர் பொன்முடி.

செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி , பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே,அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் என்பது இருக்காது என்றார். இன்னும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வரும் 13 ஆம் தேதி பொறியியல் 3 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்ற அவர்,பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends