Mnadu News

பொள்ளாச்சி விவகாரம் குறித்து சமந்தா ஆவேசம்

சமீபத்தில் தமிழகத்தையே பெரும் சோகத்தையும் வேதனையையும் உண்டாக்கியா பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பிரபல நட்சத்திரமான நடிகை சமந்தா மட்டும் இந்த சம்பவம் குறித்து எந்த விதமான பதிவும் கண்டனமும் வெளியிடவில்லை என்று ஊடகங்களும் சமந்தாவின் ரசிகர்களும் கேள்விகள் எழுந்தநிலையில் ,.இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த சம்பவம் குறித்து ஒரு பெண்ணாக எனக்கு பெரிதும் வேதனையாகவும் கோபமாகவும் இருக்கிறது இருப்பினும் இதை பற்றி பேசினால் நானே அந்த 4 மிருகங்களுக்கும் பப்லிசிட்டி கொடுத்தாக ஆகிவிடும் எனவே இதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends