Mnadu News

போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்:உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான லூப் சாலைகளில் உள்ள மீன் கடைகள் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு படி அகற்றப்பட்டது. இந்நிலையில்,லூப் சாலையின் மேற்கு பக்கத்தில் மீன் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Share this post with your friends