ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த இலகுரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஜோத்பூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று இலகு ரக ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆர் சௌதரி உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த ஹெலிகாப்டர் எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் இந்த ஹெலிகாப்டர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More