Mnadu News

மகளிர் பயணச் சீட்டை கழிவறையில் வீசி சென்ற நடத்துனர்..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்து நிலைய கழிவறையில் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படாத இரண்டு கட்டு மகளிர் கட்டணமில்லா பயணச் சீட்டுகள் மழையில் நனைந்து கிடந்ததை பயணி ஒருவர் கண்டறிந்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் நடத்துனர் கலைச்செல்வம் என்பதை கண்டறிந்து அவரை பணியிடை நீக்கம் செய்தனர்.

Share this post with your friends