Mnadu News

மக்களிடையே சண்டையை உருவாக்கும் காங்கிரஸ்: அமித்ஷா தாக்கு.

இமாச்சல் பிரதேசத்தில் சிர்மார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
காங்கிரஸின் வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும் தான் என்றும், ஆனால் பிரதமர் மோடி மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார் என்றார். காங்கிரஸ் கட்சியானது, ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளது. ஆனால், அவர்களால் நம்முடைய பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க முடியவில்லை.
பழங்குடியின அந்தஸ்து கோரி, 55ஆண்டுகளாக ஹாதி சமூகத்தினரின் நடத்திய போராட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முடித்து வைத்தார். அவர் அவர்களின் வலியைப் புரிந்துகொள்கிறார், அத்துடன்; மாநில மக்கள் மீது அவருக்கு ஒரு பற்றுதல் இருப்பதால், இமாச்சல் என்னுடையது என்று பெருமையுடன் கூறுகிறார்.
இமாச்சல் பிரதேசத்தில் 3-இல் இரு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். அரசியலில் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு முடிவு கட்டும். என்று பேசினார்.

Share this post with your friends