Mnadu News

மக்கள் நீதி மய்யத்தில் மேலும் இருவர் விலகல்…

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து நேற்று மாலை சிகே குமாரவேல் விலகினார். இந்நிலையில் மேலும் இருவர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.

சிலதினங்களுக்கு முன்னர் கட்சியில் இணைந்த கோவை சரளாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதை விரும்பாததால் சிகே குமாரவேல் கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடலூர் வடக்கு மண்டல பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் ஆகியோரும் கட்சிப் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

கட்சித் தொடங்கி சந்திக்கும் முதல் தேர்தலிலே தொண்டர்களையும் , சக குறுந்தலைவர்களையும் சரியாக கையாளத் தெரியாத கமலின் தலைமையே இதற்கெல்லாம் காரணம் எனக் கூறப்படுகிறது.

Share this post with your friends