Mnadu News

மணல் திருட்டு : ஆட்சியாளர்களை நோக்கி நீதிபதிகள் சரமாரி கேள்வி


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மணல் அள்ள இடைகால தடைவிதித்து
உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த
நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது என்ன
நடவடிக்கை எடுத்துள்ளது. எத்தனை வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது என கேள்வி
எழுப்பினார்.

மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு
விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றம் உத்திரவிட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் மணல் திருட்டு நடந்து
கொண்டுதான் இருக்கும். 500 ரூபாய்க்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஏராளமானோர்
இருக்கிறார்கள்.

Share this post with your friends