Mnadu News

மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2023 ஆண்டு வரை 141 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணை வழங்கியது.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய ஶ்ரீ, செயற்பொறியாளர் மாரியப்பன் ஆகியோர் மணிமுத்தாறு பெரு மதகு கால்வாய் பகுதியில் இருந்து தண்ணீரை விவசாய பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இதனால் அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு , சிங்கம்பட்டி, வைராவிகுளம்,தெற்கு பாப்பான்குளம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது

Share this post with your friends