Mnadu News

மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 4 ஆம் தேதி வரை சிபிஐ காவல்.

மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல் அமைச்சர்; மணீஷ் சிசோடியாவை மார்ச் 4 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல் அமைச்சர்; மணீஷ் சிசோடியாவுக்கு மருத்துவர்கள் குழு மருத்துவப் பரிசோதனை செய்தனர். சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு சிசோடியாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், மத்தியப் புலனாய்வுத் துறை தலைமையகத்தில் மருத்துவப் பரிசோதனை நடத்தியது. பரிசோதனையில் அவரின் உடல்நிலை இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மார்ச் 4 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Share this post with your friends